search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்ணை தாக்கிய தொழிலாளி கைது"

    அம்பை அருகே மாடு மேய்க்கும் தகராறில் பெண்ணை தாக்கிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
    நெல்லை:

    அம்பை அருகே உள்ள வேலாயுதம் நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சங்கரம்மாள் (வயது43). இவர் தினசரி வயல்காட்டிற்கு சென்று மாடுகளை மேய்த்து வந்தார். இவரது மாடுகளை அந்த பகுதியை சேர்ந்த ராமலிங்கம் (55) என்பவர் வளர்த்து வந்த மாடுகள் முட்டியது. 

    இதனால் சங்கரம்மாள் ராமலிங்கத்தை வேறு இடத்தில் மாடு மேய்க்கும்படி கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த ராமலிங்கம் உருட்டு கட்டையால் சரமாரி சங்கரம்மாளை அடித்து தாக்கினார். இதில் சங்கரம்மாள் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். 

    இது குறித்து அம்பை போலீசார் பெண் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்து ராமலிங்கத்தை கைது செய்தனர்.
    கோவில்பட்டி அருகே பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் வடக்குத் தெருவைச் சேர்ந்த சிங்காரவடிவேல் மனைவி பகவதி(வயது 46). இவரது வீட்டருகே குடியிருந்து வரும் கட்டிடத்தொழிலாளி கணேசன். இவரது மனைவி மாரிலட்சுமி. 

    இந்நிலையில், பகவதி தன்னை தவறான வழிக்கு அழைப்பதாக மாரிலட்சுமி அவரது கணவர் கணேசனிடம் கூறியுள்ளார். இதையடுத்து கடந்த 19-ந் தேதி பகவதி வீட்டிற்கு சென்ற கணேசன் தன் மனைவியை தவறான வழிக்கு அழைத்த பகவதியை அவதூறாகப் பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து பகவதி அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து, பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கட்டிடத் தொழிலாளி கணேசனை கைது செய்தனர்.
    சங்கரன்கோவில் அருகே நிலத் தகராறில் பெண்ணை தாக்கிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள ஆனையூர் காலணி தெருவை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி சின்னத்தாய் (வயது 65). இவர்களுக்கு சொந்தமான இடம் ஊருக்கு வெளியே உள்ளது. அந்த இடத்தை அதே ஊரை சேர்ந்த செல்லத்துரை (46) என்பவர் விலைக்கு கேட்டுள்ளார்.

    அதற்கு சின்னத்தாய் சம்மதம் தெரிவித்துள்ளார். அதற்கு பின்னர் அந்த இடத்தில் செல்லத்துரை ஆடு வளர்த்து வந்துள்ளார். ஆனால் இடத்தை கிரையம் முடிக்கவும் இல்லையாம், பணத்தையும் கொடுக்கவில்லையாம்.

    இது பற்றி பல முறை சின்னத்தாய் செல்லத்துரையிடம் கேட்டு வந்துள்ளார். இந்நிலையில் இடம் சம்பந்தமாக பிரச்சனை 6 மாத காலத்தை கடந்து விட்டது. சம்பவத்தன்று அங்கு சென்ற சின்னத்தாய் தனது இடத்தை விட்டு காலி செய்யுமாறு செல்லத்துரையிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்லத்துரை அருகில் கிடந்த கம்பியை எடுத்து சின்னத்தாயை பலமாக தாக்கியுள்ளார்.

    இதில் காயமடைந்த சின்னத்தாய் சங்கரன் கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக சின்னத்தாய் கொடுத்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் டவுண் போலீசார் வழக்குபதிவு செய்து செல்லத்துரையை கைது செய்தனர்.

    ×